<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Thursday, March 30, 2006

அடையாளங்கள்: அமர்த்யா சென் கட்டுரை

பொருளாதார நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்யா சென்னின் புதிய புத்தகமான 'Identity and Violence' நேற்று பிரசுரமாகியிருக்கிறது. அப்புத்தகத்திலிருந்து ஒரு கட்டுரை இன்றைய ஸ்லேட் வலையிதழில் வெளியாகியிருக்கிறது. இன்றைய உலகில், ஒரு மனிதனுக்கு இருக்கும் பல அடையாளங்களில் மதம் என்ற ஒற்றை அடையாளத்திற்குக் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் எழும் அபாயங்களைக் குறித்துப் பேசுகிறது.


அருமையாக எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையிலிருந்து சில quotable quotes:

"The world is made much more incendiary by the advocacy and popularity of single-dimensional categorization of human beings, which combines haziness of vision with increased scope for the exploitation of that haze by the champions of violence."

"The noble and elevating search for amity among people seen as amity between civilizations speedily reduces many-sided human beings to one dimension each and muzzles the variety of involvements that have provided rich and diverse grounds for cross-border interactions over many centuries, including the arts, literature, science, mathematics, games, trade, politics, and other arenas of shared human interest. Well-meaning attempts at pursuing global peace can have very counterproductive consequences when these attempts are founded on a fundamentally illusory understanding of the world of human beings."

இக்கட்டுரைக்கு பல காட்டமான எதிர்வினைகள் வந்திருக்கின்றன. அவற்றுள் பிரசுரிக்கக்கூடிய ஒன்று:

Subject: Singularity of Identity
From: Jaque
Date: Mar 29 2006 7:00PM

ESteemed Prof. Sen goes to great length to point out multitudes of identities Muslims have beyond being a Muslim. But he fails to see that the singular identity the world sees of Muslims is self chosen by Muslims. They talk of "Unmah" something like brotherhood of Muslims at large. It is them who want to obliterate all other identities in favor of one!

Why noone, for example, keeps pointing out that Prof. Sen is a Hindu. I think it is because Hindus do not self impose this singularity. As he has pointed out other identities like he is a Bengali, or an Indian or a Nobel Laurate, a Professor of Economics far outweighs the identity of he being a Hindu.

Take for example when Pakistan tested the nuclear bomb. It was immediately branded as "Islamic bomb"! Who gave that identity? It was the Muslims!

When Taliban destroyed 1500 year old Bamiyan Buddhas, Buddhists all over the world didn't riot or demonstrate in streets since they have other strong identities.

So while Prof. Sen's observations are correct he doesn't see where the problem lies.

There is an International organization of Islamic Countries (OIC). Have you seen one like that of say Buddhist countries, Christian countries?

So if there is the singularity of idnetity among Muslims it is self-imposed. And in fact that is the primary reason of a potential "Clash of civilizations". It is Clash of single identity Muslims against all other diffused, multitude of identities of the world.

Peace.
-Jaque


Tuesday, March 28, 2006

குடியேற்றத் தடுமாற்றம்: சில பார்வைகள்

இன்று அமெரிக்காவில் ஈராக்கை விட சூடாக விவாதிக்கப்படும் விஷயம் குடியேற்றச் சட்டங்கள் (immigration laws). இது பற்றி கருத்தில்லாதவர்களைப் பார்ப்பது அரிதாக இருக்கிறது. வானொலியில் கருத்து விவாதங்களை நடத்துபவர்கள் “Immigration” என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டுத் தூங்கப் போய் விடலாம் - மக்கள் நூற்றுக்கணக்கில் ஆக்ரோஷமாகப் பேச முன் வருகிறார்கள். இந்நிகழ்வுகளைக் குறித்த என்னுடைய பரவலான அவதானிப்புகளும், சில கருத்துக்களும் இங்கே:

பாரீசில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கும் மேலோட்டமான ஒற்றுமை தான் இருக்கிறது - இரண்டும் குடியேற்றத்தை அரசாங்கங்கள் எப்படி எதிர்கொள்கிறது என்பது பற்றியன, அவ்வளவுதான். பாரீசில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வண்ணம் அந்நாட்டின் மிக மோசமான தொழிற்ச்சட்டங்களை அரசாங்கம் மிக லேசாகத் தளர்த்தியதை மாணவர்கள் எதிர்க்கிறார்கள். வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டிய தேவை குடியேற்றத்தால் உண்டான வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க. குடியேறிகள் எக்கேடு கெட்டால் என்ன என்பது மாணவர்களின் நிலைப்பாடு.

அமெரிக்காவில் குடியேறிகள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். சட்டபூர்வமாகவோ, சட்டத்தை மீறியோ அமெரிக்காவில் குடியேறியிருக்கும் (பெரும்பாலும் ஸ்பானிஷ் பேசும் லத்தீன் அமெரிக்க) மக்கள், தங்களுக்கு உரியதாகக் கருதும் உரிமைகளைக் கோரி நடத்தும் போராட்டங்கள்.

தற்போது அமெரிக்க பாராளுமன்றத்தில் இரண்டு சட்டங்கள் விவாதிக்கப்படுகின்றன - ஒன்று கீழ் சபை நிறைவேற்றிய மசோதா - இது சட்டத்துக்குப் புறம்பான குடியேறிகளைக் கடுமையாக தண்டிக்கிறது. அப்படிச் செய்வதை ஒரு கிரிமினல் குற்றமாக மாற்றுகிறது. தெரிந்தோ தெரியாமலோ அப்படி ஒருவருக்கு ஒரு நிறுவனம் வேலை கொடுக்குமானால், அந்நிறுவனத்தைக் குற்றவாளி ஆக்குகிறது. அப்படிப் பட்டவர்களுக்கு தங்க இடமோ ஆதரவோ கொடுப்பதைக் குற்றமாக்குகிறது. எல்லைக் கோடெங்கும் ஒரு சுவர்/வேலி கட்டுவோம் என்கிறது. ஒட்டு மொத்தமாக குடியேறிகளை கெட் அவுட் என்கிறது.

மேல்சபையில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சட்டம் இதை விட கொஞ்சம் இளகியது. தாற்காலிக வேலை வாய்ப்பு விசா ஒன்றை உருவாக்கி குடியேற்றத்தை முறைப்படுத்த முயல்கிறது. ஏற்கனவே இருப்பவர்களுக்கு குடிமக்களாகவோ வேறு விதமாகவோ சட்ட பூர்வமாக மாற வழி வகுக்கிறது (அவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறது). புஷ் இந்த மசோதாவை ஆதரிக்கிறார்.

போராடும் மாணவர்கள் இந்த மேல்சபை பரிந்துரையை எதிர்க்கிறார்கள். எதுவும் இன்னமும் சட்டமாகவில்லை. பாராளுமன்ற தேர்தல் ஆண்டான இந்த வருடத்திற்குள் இந்தப் பிரச்னை தீர்க்கப்படும் என்றும் தோன்றவில்லை.

******
குடியேற்றம் பொதுவாகவே ஒரு மிக மிக சிக்கலான பிரச்னைதான். இந்த ஒரு விஷயம்

அரசியல் (ஓட்டு வங்கி),
பொருளாதாரம் (நிறுவனங்களுக்கு குடியேறி = குறைந்த சம்பளம், நிறைய லாபம், மக்கள் பார்வையில் குடியேறிகள் = குறைந்த சம்பளம், பறிபோகும் வேலை),
மதம் (லத்தீன் அமெரிக்கக் குடியேறிகள் = மத உணர்வு நிரம்பிய கத்தோலிக்கர்கள், நிரம்பும் உண்டியல்),
மொழி (குடியேறிகள் = பள்ளிகளில் ஸ்பானிஷ்)
இனம் (குடியேறிகள் != வெள்ளைக்காரர்கள்)

என்று எல்லா ஜீவாதார விஷயங்களையும் பாதிக்கிறது.

*******
அனுதினம் அரிசோனா, நியூ மெக்ஸிகோ, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் மிகக் கடுமையான பாலைவன சீதோஷ்ண நிலைமைகளையும் மீறி பலர் சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முற்படுகிறார்கள். இதில் சிலர் இறக்கிறார்கள், சிலர் பிடிபடுகிறார்கள், பலர் வந்து சேர்கிறார்கள். இந்த விஷயத்தில் மெக்ஸிகோ அரசாங்கம் மெத்தனமாக இருக்கிறது என்பது அமெரிக்கர்களுக்கு ஒரு பெரும் குறை. இதன் பொருட்டு சமீபத்தில் மெக்ஸிகோ அரசாங்கம் வாஷிங்டன் போஸ்டில் ஒரு முழுப் பக்க விளம்பரம் கொடுத்திருந்தது. வினோதமான விளம்பரம். அதில் மெக்ஸிகோ நாட்டு மக்கள் சட்ட விரோதமாக எல்லை தாண்டிப் போகிறார்கள் என்றால், அதற்கு அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகள் தான் காரணம் என்கிறது. அமெரிக்கா விசா சட்டங்களை தளர்த்தினால், நாங்களும் எங்கள் எல்லைகளை நிர்வகிக்கிறோம் என்கிறது.

இதைப் பிறர் சொன்னால் பரவாயில்லை. ஒரு அரசாங்கமே இப்படிச் சொல்வது வெட்கக் கேடு இல்லை?

அது மட்டுமல்ல, அமெரிக்க எல்லையை எப்படி பாதுகாப்பாகக் கடப்பது என்பதற்கு ஒரு கையேட்டையும் தயாரித்து மக்களுக்கு இலவசமாக அளிக்கிறது இந்த அரசாங்கம்! தனது பொருளாதாரத்தை நிமிர்த்தி மக்களுக்கு வேலை வாய்ப்பைப் பெருக்க யோக்கியதை இல்லாவிட்டாலும் அடுத்த நாட்டுக்குப் போய்ப் பிழைத்துக் கொள் என்று சொல்லாமலாவது இருக்கலாம்.

*******

சென்ற இரு நாட்களாக நடந்து வரும் மிகப் பெரிய போராட்டங்கள் வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ ஆகிய நகரங்களில் குடியேறிகள் தங்கள் உரிமைகளுக்காக நடத்துபவை. இவற்றில் வினோதம் என்னவென்றால் இப்போராட்டங்களில் அவர்கள் உபயோகப்படுத்தும் கொடி மெக்ஸிகோ நாட்டுக் கொடி. மக்களே, நீங்கள் அமெரிக்காவில், அமெரிக்க சட்டங்களுக்காகப் போராடுகிறீர்கள்; உங்கள் நாட்டுப் பற்றை கொஞ்சம் நேரம் ஒதுக்கி வையுங்கள், அது தான் புத்திசாலித்தனம், ஏற்கனவே, ஸ்பானிஷ் பேசுகிறார்கள், சமூகத்துடன் ஒன்றுவதில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் வாய்க்கு இன்னமும் அவல் கொடுக்காதீர்கள்!

*******

இந்த விஷயத்தை தீவிரவாத அபாயங்களுடன் முடிச்சுப் போட்டுப் பேசுவதைப் போல ஒரு நாட்டுப் பற்றான விஷயம் வேறில்லை. எல்லைகளை பலப்படுத்திப் பாதுக்காப்பது அமெரிக்காவிற்கு ஒரு சர்வ ரோக நிவாரணி என்ற கருத்து மக்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது/வேரூன்றப்பட்டுள்ளது.

********

இந்த ஜோக் கேட்டிருப்பீர்கள்: எல்லையில் ஒரு செக் போஸ்டில் ஒரு காவல்காரன் நின்று கொண்டிருந்தான். மெக்ஸிகோவிலிருந்து சைக்கிள் ஓட்டிக் கொண்டு ஒருவன் வந்தான். “ஏதாவது கடத்துகிறாயா?” காவல்காரன் கேட்டான். வந்தவன் “இல்லை சார்“ என்று சொன்னான். காவல்காரன் சைக்கிளை நன்கு பரிசோதித்துப் பார்த்தான். ஒன்றுமில்லை. ‘போய் வா' என்று அனுப்பி விட்டான். மறுநாளும் அதே ஆள் வந்தான், சைக்கிளில். இன்றும் பரிசோதித்து அனுப்பி விட்டான். இது போல் பல நாட்கள் கழிந்தன. காவல்காரனுக்குக் கடுமையான சந்தேகம் - இவன் கண்டிப்பாக எதையோ கடத்துகிறான் என்று. என்ன என்று கண்டுபிடிக்க முடியாமல், பல நாட்கள் கழித்து அவனிடம் ‘இதோ பார், நீ எதையோ கடத்துகிறாய் என்று தெரிகிறது, என்ன கடத்துகிறாய்? தயவு செய்து சொல்லி விடு, உன்னை மறுபடி பரிசோதிக்கவே மாட்டேன்’ என்று கெஞ்சிக் கேட்டான். வந்தவன் கொஞ்சம் தயங்கி விட்டுச் சொன்னான்:

‘நான் கடத்துவது சைக்கிள்களை!'

இப்பொழுது மக்கள் தம்மைத் தாமே கடத்திக் கொண்டிருக்கிறார்கள்..

********

என் தீர்வு:

1. வந்தவர்கள் வந்து விட்டார்கள் - அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குச் சட்ட பூர்வமாக தங்க அனுமதி அளித்து, பின் சொந்த நாடு திரும்புமாறு பணிக்க வேண்டும்.
2. தற்காலிக வேலை விசாக்கள் தாராளமாகக் கிடைக்க வேண்டும். விசா வழங்குதல் சீர்படுத்தப்பட்டு விரைவாக்கப்பட வேண்டும்.
3. சட்ட பூர்வமாக உள்ளே நுழைந்தவர்கள் குடிமக்களாக விரும்பினால் அதற்குப் பாதை வேண்டும்.
4. இவைகளைச் செய்து விட்டு எல்லைகளைக் கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு கண்காணியுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை.


Sunday, March 26, 2006

தில்லி சலோ!

March 28, 2006 Update: தில்லி சென்றடைந்த இவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நிகழ்ந்ததாய்ச் செய்திகள் சொல்கின்றன - மேலும் விவரங்கள், படங்கள்.

போபால் என்ற வார்த்தையைப் படித்தாலே, சரி ஏதோ பழங்கதை என்று தான் நேற்று வரை நினைத்திருப்பேன். இன்று நான் கலந்து கொண்ட ஒரு தன்னார்வ தொண்டமைப்பின் சந்திப்பில், ஒரு இளைஞரின் பேச்சின் மூலம் சில சமீபத்திய செய்திகள் தெரிய வந்தன. சுருக்கமாகச் சொல்கிறேன்.

இன்று நடப்பது:

போபால் விபத்தில் தப்பிப்பிழைத்தவர்களில் சுமார் எழுபது பேர், போபாலிலிருந்து புது தில்லி வரை நடை பயணம் (787 கிலோமீட்டர்) மேற்கொண்டுள்ளனர். தற்போது தில்லியின் மிகச் சமீபத்தில் இருக்கும் இவர்கள், நீங்கள் இதைப் படிக்கும் தருணத்தில் நகரத்தைச் சென்றடைந்திருப்பார்கள்.

தில்லியில் பிரதமருடன் ஒரு நேர்காணலைக் கோரி இருக்கிறார்கள். நேர்காணல் கிடைக்காவிட்டால், கால வரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் தீர்மானித்திருக்கிறார்கள்.

இவர்கள் எதற்காக நடக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுமுன் சில விஷயங்கள்.



இவை உண்மைகள்:

  • ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த போபால் விபத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலானவர்கள் பலத்த காயமுற்றனர். அவர்களுள் சுமார் இருபதாயிரம் பேர் அக்காயங்களினால் பின்பு உயிரிழந்தனர்.
  • நச்சு வாயுவினால் மாசடைந்த சுற்றுப்புறம், நீர்நிலைகள் ஆகியவை இன்று வரை சுத்திகரிக்கப்படவில்லை. இன்று வரை அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகள் பல பிறவிக் கோளாறுகளுடன் பிறக்கின்றன. அங்கு வாழும் மக்களை பல வினோதமான உடல் உபாதைகள் பீடிக்கின்றன.
  • டவ் கெமிக்கல் கம்பெனி அளித்த நிவாரணத் தொகை - பல, பல வருடங்கள் போராடிப் பெற்றது - உயிரிழப்பிற்கு $1170, பலத்த காயத்திற்கு $520. ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு இது பிச்சைக் காசு என்பது மட்டுமல்ல, இது பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த வித நிவாரணத்தையும் பெற்றுத் தராத ஒரு சிறிய தொகை.


நடைபயணத்தின் முக்கிய கோரிக்கைகள்:

1. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குழந்தைகளின் உடல்நலன் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கு நீண்ட நாள் மருத்துவ வசதி தர வேண்டும்.
2. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று வரை வழங்கப்படாத சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
3. வாரன் ஆண்டர்சன் மற்றும் யூனியன் கார்பைடு நிர்வாகிகள் சட்டத்தின் முன் நிறுத்தப் பட வேண்டும்.
4. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் சுற்றுப்புறச் சூழல் அறிவியற் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சுத்திகரிக்கப் பட வேண்டும்.
5. டவ் நிறுவனம் தனது கடமையை நிறைவேற்றும் வரை இந்திய அரசாங்கம் அந்நிறுவனத்துடன் வர்த்தகம் செய்வதை நிறுத்த வேண்டும்.
6. டிசம்பர் மூன்றாம் தேதி தேசிய தொழிற்சாலை விபத்துக்களுக்கான நினைவு தினமாக அனுசரிக்கப் பட வேண்டும்.


நாம் ஏன் இவர்களை ஆதரிக்க வேண்டும்?

ஒளிமயமாக வளரும் இந்தியாவினால் சுலபமாக மறக்கப்பட்ட இவர்களுக்குக் குரல் கொடுப்பது நமது தார்மீகக் கடமை என்பது மட்டுமல்ல காரணம்.

உலகமயமாகி வரும் வர்த்தகத்தின் ஆனந்த ஆலிங்கனத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் இந்தியாவிற்கு போபால் என்றென்றும் நினைவில் இருக்க வேண்டும். இருபது வருடங்களுக்கு முன்னால் இருந்ததை விட, போபால் விபத்து விடுக்கும் செய்திகள் இன்று இந்தியாவிற்கு அதிகம் தேவைப்படுகின்றன. நதிநீர் விற்பனை, மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துப் பரிசோதனைகள் என்று பல விஷயங்களில் அசிரத்தையாகவோ, அயோக்கியத்தனமாகவோ இந்திய மக்கள் நலனை பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காவு கொடுத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு போபால் மறுபடி மறுபடி நினைவுபடுத்தப்பட வேண்டும்.

அந்த விதத்தில் இன்று நடைபயணம் மேற்கொண்டிருக்கும் மக்கள் அவர்களுக்காக நடக்கிறார்கள் என்று சொல்வதை விட நமக்காக நடக்கிறார்கள் என்று சொல்வதே பொருந்தும். நமக்காகப் போராடும் அவர்களுக்கு வெறுமனே ஆதரவுக் குரல் மட்டுமாவது கொடுப்பது நமது கடமை.


என்ன செய்ய வேண்டும்?

1. ஒன்று மட்டும் செய்வீர்களானால், இந்தத்தளம் சென்று ஒரு ஃபேக்ஸை அனுப்புங்கள்.
2. இரண்டு காரியங்கள் செய்ய முடிந்தால், இந்த பெட்டிஷனிலும் கையெழுத்துப் போடலாம்.
3. இந்தப் பட்டியலில் இருக்கும் மேலதிக செயல்களும் செய்யலாம்.
4. நடை பயணம் பற்றிய தற்போதைய நிலவரத்திற்கு இங்கு செல்லவும்.
5. மேலும் விவரங்களுக்கு.


சண்டே போஸ்ட் - 7

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:

  1. நோம் சாம்ஸ்கியுடன் உரையாடல்: இது இன்றைய போஸ்டில் வெளியானது அல்ல. இரண்டு நாட்களுக்கு முன் வெள்ளியன்று வெளியானது. போஸ்டின் வலைத்தளத்தில் தனித்துவமான ஒரு பகுதி, அதில் அன்றாடம் நடத்தப்படும் உரையாடல்கள். பொதுவாக அப்பத்திரிக்கையின் நிருபர்களோடு அவர்கள் எழுதிய கட்டுரைகளைப் பற்றிய விவாதங்களாக நிகழும் இவ்வுரையாடல்கள், பத்திரிக்கையின் செயல்பாடுகள், நிருபர்களின் அணுகுமுறைகள் ஆகியவற்றை வாசகர்களுக்கும், வாசகர்களின் பார்வைகளை நிருபர்களுக்கும் கொண்டு செல்ல உதவுகின்றன. வேறு எந்த பத்திரிக்கையும் இதை இவ்வளவு தீவிரமாகவும், பரந்த அளவிலும் செய்கிறதா என்று தெரியவில்லை.

    நிற்க. பத்திரிக்கை நிருபர்களோடு மட்டும் இவ்வுரையாடல்கள் நிகழ்த்தப்படுவதில்லை. சிந்தனையாளர்கள், சமீப செய்திகளில் இருப்பவர்கள், தொழில் முனைவர்கள் எனப் பலரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். பல வருடங்களுக்கு முன் கூகிளின் ஆரம்ப காலத்தில் லேரி பேஜ் வந்து PageRank தொழில் நுட்பத்தை விளக்கிக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது.

    அந்த வரிசையில் வெள்ளியன்று சாம்ஸ்கி வந்து உரையாடி இருக்கிறார். சாம்ஸ்கி அமெரிக்கக் கருத்தியல் வட்டங்களின் விளிம்பு நிலையில் இருப்பதாகக் கருதப்படுவது துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளை அவர் சில சமயம் கண்மூடித்தனமாக எதிர்ப்பதாகத் தோன்றினாலும், காலம் அவர் சொல்வதில் இருக்கும் நியாயங்களை நிரூபித்திருப்பதாகவே தோன்றுகிறது. உரையாடலிலிருந்து ஒரு கேள்வி:

    Arlington, Va.: Why do you think the US went to war against Iraq?

    Noam Chomsky: Iraq has the second largest oil reserves in the world, it is right in the midst of the major energy reserves in the world. Its been a primary goal of US policy since World War II (like Britain before it) to control what the State Department called "a stupendous source of strategic power" and one of the greatest material prizes in history. Establishing a client state in Iraq would significantly enhance that strategic power, a matter of great significance for the future. As Zbigniew Brzezinski observed, it would provide the US with "critical leverage" of its European and Asian rivals, a conception with roots in early post-war planning. These are substantial reasons for aggression -- not unlike those of the British when they invaded and occupied Iraq over 80 years earlier, at the dawn of the oil age.

  2. பாரிஸ் எரிகிறதா?: தற்போது பாரிஸ் நகரத்தில் நடக்கும் கலவரங்கள் சில மாதங்களுக்கு முன் புறநகர்ப் பகுதிகளில் நடந்த கலவரங்களின் எதிர்வினை என்கிறார் கட்டுரையாசிரியர். முன்பு நடந்தது வேலை வாய்ப்புகள் கோரும் போராட்டம். அதற்கு வழிவகுக்கும் வகையில் ஃப்ரான்சு அரசாங்கம் தொழிற்சட்டங்களைத் திருத்தப் போக, அத்திருத்தங்கள் வேலையிலிருப்போரைக் கலவரப்படுத்தியுள்ளன. இவை எல்லாவற்றிற்கும் மூலக் காரணம் அரசாங்கத்தின் உறுதியின்மை என்கிறார். கட்டுரையிலிருந்து:

    "This is the second time in four months that France has been seized with violent protests. And in an important sense, these are counter-riots, since the goals of the privileged students conflict with those of the suburban rioters who took to the streets last November. The message of the suburban rioters: Things must change. The message of the students: Things must stay the same. In other words: Screw the immigrants."

  3. இணையத்தில் தீவிரவாதம்:இணையத்தின் அப்பாவித் தளங்களைக் குத்திக்குதறி ரணகளமாக்கிக் கொண்டிருக்கும் தீவிரவாதக் கொந்தர்களில் ஒருவனை ப்ரிட்டிஷ் அரசாங்கம் சமீபத்தில் கைது செய்தது. இர்ஹாபி 007 என்ற பெயரில் அவன் எப்படிச் செயல்பட்டான், என்னென்ன செய்தான் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. இப்படி முடிகிறது:

    "But Irhabi's absence from the Internet may not be as noticeable as many hope. Indeed, the hacker had anticipated his own disappearance. In the months beforehand, Irhabi released his will on the Internet. In it, he provided links to help visitors with their own Internet security and hacking skills in the event of his absence -- a rubric for jihadists seeking the means to continue to serve their nefarious ends. Irhabi may have been caught, but his online legacy may be the creation of many thousands of 007s."

  4. பிரிட்டிஷ் ராஜ்: பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தினர் இந்தியாவில் எப்படி செயல்பட்டனர் என்பதைப் பற்றி வெளி வந்திருக்கும் ஒரு புதிய புத்தகத்தின் மதிப்பீடு. எழுதியிருப்பவர் சஷி தரூர்:

    "The Ruling Caste paints an arresting and richly detailed portrait of how the British ruled 19th-century India -- with unshakeable self-confidence buttressed by protocol, alcohol and a lot of gall. Stalin found it "ridiculous" that "a few hundred Englishmen should dominate India." Gilmour's book helps explain how they pulled it off."


  5. காலங்களில் இது வசந்தம்: வசந்தக் காலம் வருமோ என்று ஏங்கிக் கொண்டிருந்த வாஷிங்டன் இந்த வாரம் வா வா வசந்தமே என்று பாடத்துவங்கியிருப்பதற்குக் காரணம் வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடிக் கொண்டிருக்கும் செர்ரிப்பூக்கள். பொடோமக்கின் வசந்தக்கால நதியலைகளின் அருகே இந்த வாசமில்லா மலர்கள் வசந்ததைத் தேடி வரவேற்றுக் கொண்டிருக்கின்றன.



Wednesday, March 22, 2006

That's the way they like it...

How can you read this headline in today's Hindu and not smile?

:-)

Tuesday, March 21, 2006

இந்திய-அமெரிக்க உறவு: ஹென்ரி கிஸ்ஸிங்கர்

அணு ஆயுதங்கள் உள்ள நாடுகளுக்கு அணுமின்சாரத் தொழில்நுட்பங்கள் அளிக்கப்படக்கூடாது என்ற அமெரிக்க சட்டத்திலிருந்து இந்தியாவிற்கு விசேஷ விலக்கு அளிக்கும் மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், இந்திய-அமெரிக்க உறவின் வரலாறு, எதிர்காலம் ஆகியவை பற்றி அமெரிக்காவின் மூத்த கருத்து கந்தசாமி கிஸ்ஸிங்கர் எழுதுகிறார்.

புதியதாய் விஷயம் ஒன்றுமில்லை என்றாலும், இந்த மண்டை எப்படி யோசிக்கிறது என்பதை தெரிந்து கொள்வது பயனுள்ளது.

குறிப்பு: நேற்று போஸ்டில் வெளியான இந்தப் பத்தி இன்று வரை அதன் வலைத்தளத்தில் ஏற்றப்படாதது புதிராக இருக்கிறது. கீழுள்ள சுட்டி, இப்பத்தி மறுபதிப்பு செய்யப்பட்ட ஒரு தளத்திலிருந்து.

கட்டுரைக்கான சுட்டி


Sunday, March 19, 2006

சண்டே போஸ்ட் - 6

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:

  1. ஈராக், ஈராக், ஈராக்: ஈராக் படையெடுப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவை அனுசரிக்கும் விதமாக, பல கருத்துப் பத்திகள்/கட்டுரைகள்/சித்திரங்கள்.


    • பாக்தாதில் வாழும் ஒரு வலைப்பதிவாளரின் வாழ்வில் ஒரு வாரம், அவரது சொந்த வார்த்தைகளில். மிகவும் சுவாரசியமான கட்டுரை - பொய்களுக்கும் வதந்திகளுக்கும் அப்பாலிருந்து வரும் ஒரு நிஜக் குரல். அரசியல், ஆட்சியமைப்பு, நாட்டின் எதிர்காலம் என்பன பற்றியெல்லாம் ஹேஷ்யங்களின்றி, இன்றைய வாழ்வின் யதார்த்தங்களை முன் வைக்கிறது:

      "Just as I set foot in my room, an intense barrage of gunfire erupted on our street. Not good. My cell phone was ringing; it was a friend who lives down our street. "It's an American patrol," he al most whispered. "I can see Humvees from where I am. And it looks like they have Iraqi police with them.""

      "We were engrossed in morning preparations at work when a colleague called our attention to the latest "episode" of Saddam's trial -- a form of cheap entertainment for many Iraqis against the backdrop of dreary events in Baghdad. At least it's the one thing that Iraqis of all backgrounds agree upon."

      "In addition to regular and fixed holidays, it is possible to make up your own without the need to take leave. Better still, you can do it from the comfort of your bed, citing an unexpected security incident as an excuse.
      Like sometimes I don't feel like going to work. I just oversleep. The phone rings and wakes me up at 11 am.
      "Where are you, Dr.?" my boss inquires. "We were expecting you. You know the Directorate might send someone for inspection today."

      "Oh, I apologize, Dr.," I reply, trying to sound as wakeful as I can. "I'm on the Canal highway, and there seems to be an American roadblock. I'm not sure I'm going to make it to the clinic today."
      "I see. Let me know if you can -- Bye."
      And it's back under the sheets for me."

      :-)

      இவரது வலைப்பதிவின் முகவரி: http://healingiraq.blogspot.com/

    • ஈராக்கின் போராளிகள்: யார் எவர்? - நான்கு பெரிய குழுக்கள், ஆறு சிறிய அமைப்புகள் எனப் பரவி இருக்கும் ஈராக்கின் போராளிக் குழுக்களைப் பற்றி அறிமுகங்கள்.

    • போர்: நம்பிக்கை: மூன்றாண்டுகளுக்கு முன்பு பாக்தாதில் அமெரிக்கப்படைகள் குவிந்து கொண்டிருந்த போது, ஈராக்கின் செய்தித்துறை அமைச்சர் "அமெரிக்கப் படைகளா? பாக்தாதிலா? சுத்த ஹம்பக்!" என்ற அளவில் காமெடியாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தக் காமெடிக்கு ஈடாக, அமெரிக்க ராணுவ அமைச்சர் டானல்ட் ரம்ஸ்ஃபீல்டு கடந்த மூன்று ஆண்டுகளின் சாதனைகள் என்று ஒரு பட்டியலை முன்வைக்கிறார்.

      "Fortunately, history is not made up of daily headlines, blogs on Web sites or the latest sensational attack. History is a bigger picture, and it takes some time and perspective to measure accurately."

    • போர்: அவநம்பிக்கை: வலதுசாரி அறிவுஜீவியாக அறியப்படும் ஜார்ஜ் வில், இதற்கு மாறான பார்வையை முன்வைக்கிறார். பலமற்ற ஈராக்கிய அரசாங்கத்தின் செயலின்மையால் மக்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகி மதச்சார்புடைய குழு அடையாளங்களில் தஞ்சம் புகுகின்றனர் என்ற வாதத்தை முன்வைக்கிறார். முடிவில்:

      "Conditions in Iraq have worsened in the 94 days that have passed since Iraq's elections in December. And there still is no Iraqi government that can govern. By many measures conditions are worse than they were a year ago, when they were worse than they had been the year before. Three years ago the administration had a theory: Democratic institutions do not just spring from a hospitable culture, they can also create such a culture. That theory has been a casualty of the war that began three years ago today."

  2. ஐரோப்பாவும் இஸ்லாமும்: ஒரு அனுபவக் கட்டுரை: ஒரு இஸ்லாமிய இளைஞனை மணந்து மதம் மாறிய டச்சுப் பெண்மணியின் வாழ்க்கை எவ்வாறு மாறியுள்ளது என்பது பற்றியும், டச்சு நாட்டில் இஸ்லாமிற்கு எதிரான உணர்வுகள் தீவிரமடைந்து வருவது பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது. தெருக்களில் பர்தா அணிவதையும், டச்சு மொழி தவிர மற்ற மொழிகளைப் பேசுவதையும் தடை செய்யும் சட்டங்கள் இயற்றப்பட இருக்கின்றனவாம். மேலும் சில விஷயங்கள் காமெடியாக இருக்கின்றன:

    "Immigrants must learn some Dutch, pass a history and geography test and, to get a feel for whether they can live in this society, watch a film on Dutch culture that includes two gay men kissing and a topless woman walking on a beach."

    The agony!! :-)

  3. இந்தியாவின் ஆயுர்வேத மையங்கள்: ஒரு பயணக் கட்டுரை: உடலையும் மனதையும் புனரமைப்பு செய்யும் ஆயுர்வேத சிகிச்சை மையங்களுக்குச் சென்று வந்த ஒரு அமெரிக்கரின் பயணக் கட்டுரை. தமிழ்நாட்டில் ஒரு மையத்திலும், வடக்கே கங்கைக் கரையில் ஒரு மையத்திலும் இருந்து சிகிச்சை பெற்றிருக்கிறார். ஒரு மாதம் லீவு போட்டு விட்டு...

    கட்டுரையில் ஒரு சுவாரசியமான தகவல்:

    "The AVC clinic in Coimbatore is so highly regarded that the National Center for Complementary and Alternative Medicine at the National Institutes of Health has chosen it as the locus of its first controlled, double-blind study to determine whether ayurvedic medicine really works. The study is designed to determine whether the ancient Indian approach can match or exceed Western results in the treatment of rheumatoid arthritis; results are expected in a year or so."

  4. இந்திய உணவு: இரண்டு புதிய புத்தகங்கள்: இந்தியர்கள் தமது உணவு வகைகள் அனைத்தையும் 'கறி' (curry) என்று அழைப்பதில்லை போன்ற அரிய ரகசியங்களை பகிரங்கப்படுத்துகிறது.



Wednesday, March 15, 2006

நலம்தானா?

அலுவலகம் ஆண்டுதோறும் அளிக்கும் இலவச உடல்நலப் பரிசோதனையில் கலந்து கொண்டேன். ஒரு குடம் ரத்தத்தை உருவிக் கொண்டு ஊருக்குப் போய் லெட்டர் போடுகிறோம் என்றார்கள். போட்டார்கள். கோடை விடுமுறையில் வீடு வந்து சேரும் பரிட்சை முடிவைத் திறப்பது போல் திறந்தேன். கொலஸ்ட்ரால் மொத்த எண்ணிக்கை பரவாயில்லை, கெட்ட கொலஸ்ட்ராலும் கட்டுக்குள் தான் இருந்தது. முழுப் பட்டியலில் இருந்த எழுபத்தி இரண்டு சோதனை முடிவுகளில் எழுபத்தி ஒன்று ஒகே. ஒன்றே ஒன்று - ட்ரைக்ளிசரைட் (Triglyceride) என்ற ஒரு துஷ்ட பதார்த்தம் மட்டும் - 150 என்ற அளவில் இருக்க வேண்டியது - 538-இல் இருந்தது. கொஞம் பக்கென்றது. மறு நாள் அலுவலகத்தில் ஒரு சக தமிழரிடம் சொன்ன போது சிரித்தார். இது எல்லா இந்தியர்களுக்கும் இருப்பதுதான், அதுவும் தென்னிந்தியர்களுக்கு என்று சொன்னார். 'சோத்தைக் குறை' என்றார். 'எக்சர்ஸைஸ் பண்ணு' என்றார். 'சரி' என்றேன்.

****

வசந்தம் வருகிறது (அடுத்த வாரம்). பூக்கள் மலரத் துடித்துக் கொண்டிருக்கின்றன. கூடவே மகரந்தத் துகள்களும் வரும். சுவாசிக்கும் காற்றின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும் ஆயிரக்கணக்கில் ஆக்கிரமித்து கண், மூக்கு, வாய் என எல்லா வாசல் வழியாகவும் அழையா விருந்தாளிகளாக வந்து அழிச்சாட்டியம் செய்யும். Allegra என்ற ஒரு மருந்துக்குத் தான் கட்டுப்படும். அதற்கு மருத்துவர் சீட்டு வேண்டும்.


எனது மருத்துவர் டாக்டர் கூப்பர் நல்ல மனிதர். நிறைய இந்திய வாடிக்கையாளர்கள். ஒவ்வொருவரிடமும் இந்தியாவைப் பற்றி கொஞ்சம் விஷயம் தெரிந்து கொண்டு மற்றவர்களிடம் ஜல்லி அடிப்பார். போகும் போது எதற்கும் இருக்கட்டும் என்று எனது அலுவலகப் பரிசோதனைத் தகவலை எடுத்துச் சென்றேன்.

டாக்டரைப் பார்த்ததும் அதை அப்பாவிடம் ப்ராக்ரஸ் ரிபோர்ட்டை நீட்டுவது போல் நீட்டினேன். அவர் பட்டியலைப் பார்த்தார்; இரண்டாம் பக்கத்தில் இருந்த பெரிய எண்ணைப் பார்த்ததும் 'ஹா!" என்றார். என்னை நிமிரிந்து பார்த்தார். மறுபடியும் தாளைப் பார்த்தார், 'ஹா!' என்றார், என்னைப் பார்த்தார். மறுபடியும் தாள், 'ஹா!', நான்.

'போதுமா?' என்றேன்.

மறுபடியும் தாள், 'ஹா!' , நான்.

'சரி போதும்' என்றார்.

'என்னை பயமுறுத்துகிறீர்கள்' என்றேன்.

'நல்லது, அது தான் என் நோக்கம்' என்றார்.

இது ரொம்ப அதிகம், மருந்து கொடுக்கலாமா என்று யோசிக்கிறேன் என்றார். இந்தியர்களுக்கு இதெல்லாம் சகஜம் தானே என்றேன். இந்தியர்களின் மாரடைப்பு புள்ளி விவரம் தெரியுமா என்றார். தெரியாது என்றேன். எனக்கும் தெரியாது என்றார்.

ஒரு இரண்டு மாதம் அவகாசம் கொடுக்கிறேன், எண்ணையைக் குறை, எக்சர்ஸைஸ் பண்ணு, இல்லாவிட்டால் ஒரு ஸ்டாடினில் உட்கார வைத்து விடுவேன் என்றார். 'சரி' என்றேன்.

****

அல்லெக்ரா மருந்து வேண்டும் என்றேன். அதற்கென்ன கொடுத்தால் போச்சு என்றார். எந்த மருந்துக் கடை போகப் போகிறாய் என்றார். இதை எதற்குக் கேட்கிறார் என்று யோசித்தவாறு இன்ன கடை என்று சொன்னேன். ஒரு கணினியைத் திறந்து அல்லெக்ராவில் ஒரு சுட்டியைத் தட்டி, எனது மருந்துக் கடையில் ஒரு தட்டு தட்டினார். மருந்துச் சீட்டை உன் கடைக்கு அனுப்பி விட்டேன், சாயந்திரம் வீடு போகும் வழியில் கடைக்குப் போனால் கொடுத்து விடுவார்கள் என்றார். தாளை எடுத்துக் கொண்டு கடையில் கொடுத்து ஒரு மணி நேரம் காத்திருந்து மருந்தைப் பொறுக்கிக் கொள்வதெல்லாம் தேவையில்லை! 'புது சிஸ்டம், மூணு மாசமா இருக்கு' என்றார்.

****

'இன்னொன்று பார்க்கிறாயா' என்றார், பெருமையாக. என்ன என்றேன். ஒரு சுட்டியைத் தட்டி விட்டு, ஒரு மைக்கை எடுத்து என்னுடைய இந்த வருகை பற்றியும் எனது உடல் நலம் பற்றியும் குறிப்புகளைப் பேசினார். அவை கணினியில் நோட்ஸாகப் பதிவாகின. டாக்டருக்குப் பெருமை தாங்கவில்லை. நான் அவரைப் பார்த்து 'இதனால் இந்தியாவில் எத்தனை பேருக்கு வேலை போயிருக்கும் என்று தெரியுமா?' என்றேன். அவர் கபகபவென்று சிரித்து விட்டு 'அவர்களுக்கு வேலை கிடைத்தது இண்டர்நெட் என்ற தொழில் நுட்பத்தால், அவர்களுக்கு வேலை போனது வாய்ஸ் ரெகக்னிஷன் என்ற தொழில் நுட்பத்தால்' என்றார். 'What one technology giveth, another technology taketh away' என்றார்.

****

கிளம்பு முன் நினைவுபடுத்தினார். 'இரண்டு மாதத்தில் மீண்டும் வா' என்றார். 'எக்சர்ஸைஸ் பண்ணு' என்றார். 'சரி' என்றேன்.


Sunday, March 12, 2006

சண்டே போஸ்ட் - 5

இன்றைய வாஷிங்டன் போஸ்ட் நாளிதழிலிருந்து சில சுவாரசியமான கட்டுரைகள்:

1. மிலோசவிச் மரணம் - வாழ்க்கைக் குறிப்பு: பல சக கொடுங்கோலர்களைப் போல அகாலமாக, மர்மமான முறையில் மரணமுற்ற முன்னாள் செர்பியத் தலைவர் மிலோசவிச்சைப் பற்றி ஒரு வாழ்க்கைக் குறிப்பு. சென்ற தசாப்தத்தில் முன்னாள் யுகோஸ்லாவிய மாநிலங்களுக்கிடையே நிகழ்ந்த இன/மத/நிலப் போர்களின் போது நடந்த அராஜக வன்முறைகளுக்கு மிலோசவிச் மட்டுமே பொறுப்பில்லை என்றாலும், அக்காலத்தின் கொடுங்கோன்மையையும் எதேச்சாதிகாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த வரலாற்றிற்கு மிலோசவிச் பயன்படுவார் என்று தோன்றுகிறது. கட்டுரையின் தொடக்கம்:

"Slobodan Milosevic rode nationalist pride and rage to power and led his Serb compatriots into four ethnic wars.

He lost them all."


2. ஈராக்கின் எதிர்காலம்: ஈராக் போர் துவங்கி மூன்று - மூன்று! - வருடங்கள் ஆகின்றன. ஆட்சியை மாற்றுவோம், ஆயுதங்களை ஒழிப்போம் என்று புறப்பட்டுப் போனவர்கள், போனவர்கள்தாம். இம்மூன்று வருடங்களில் போஸ்ட், டைம்ஸ் பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் வசதியான நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு எழுதிய தலையங்கங்கள், ஈராக்கின் எதிர்காலத்தைப் பலவாகக் கற்பனை செய்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் அமெரிக்காவிற்கு வெற்றி சாத்தியங்கள் குறைந்து கொண்டே வந்திருக்கின்றன. அந்த வரிசையில் இன்னொரு தலையங்கம் இது என்றாலும், ஈராக் பலவாறாக துண்டிக்கப்படலாம் என்ற சாத்தியத்தைக் கோடிகாட்டி எழுதப்பட்ட முதல் தலையங்கம் இது என்று நினைக்கிறேன்.

3. இந்தியாவுடன் அணுமின் ஒப்பந்தம்: இந்தியாவுடனான அணுமின் ஒப்பந்தத்தை விமரிசிப்பதற்கு இருக்கும் காரணங்களிலேயே மிகவும் ஓட்டையான காரணம், இதனால் அமெரிக்கா உலக அணு ஆயுத அரங்கத்தில் இரட்டை நிலை எடுக்க நேரிடும் என்பது. வெளியுறவு விஷயங்களில் கிட்டத்தட்ட நூற்றிப்பதினாறு நிலைகளைக் கொண்ட அமெரிக்கா இந்த விஷயத்தில் இரண்டு நிலைகளோடு நிறுத்திக் கொண்டால் முன்னேற்றம் தான். இருப்பினும், இந்த இரட்டை நிலை வாதத்தை டாராக்கி நாராக்குகிறார் கார்னகி எண்டோமண்டைச் சேர்ந்த ராபர்ட் காகன்:

"As for double standards, yes, we have double standards. The nuclear Non-Proliferation Treaty erected a gargantuan double standard. It declared that possession of the world's most devastating and militarily decisive weapons would be limited to the five nations that already possessed them. And this was a particularly mindless kind of double standard, since membership in the nuclear "club" was not based on justice or morality or strategic judgment or politics but simply on circumstance: Whoever had figured out how to build nuclear weapons by 1968 was in. At least our double standard for India makes strategic, diplomatic, ideological and political sense."

4. உங்கள் சுற்றுச்சூழல் காலடித்தடம் எத்தனை பெரியது? - நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையில் தனிப்பட்ட அளவில் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதிக்கிறோம், நமது பாதிப்பு உண்டாகும் தீமையைக் குறைப்பது எவ்வாறு என்பதை விளக்கும்/ஆராயும் கட்டுரை. ஒரு புதிய அமைப்பை அறிமுகம் செய்கிறது - FreeCycleDC என்ற இந்த இணையக் குழுமம், உங்கள் வீட்டில் உங்களுக்கு உபயோகப்படாத விஷயங்கள் குப்பை மலையில்(landfill) சேர்வதைத் தடுத்து, அவற்றை இலவசமாக எடுத்துச் செல்லும் தன்னார்வ தொண்டமைப்பு.

'"I discovered Freecycle while redoing my front porch last summer," Ridgley says. "I had perfectly reusable deck wood that I didn't need anymore, and a neighbor told me Freecycle would ensure it wouldn't get sent to a landfill." With more than 9,300 local members, FreecycleDC ( http://groups.yahoo.com/group/FreecycleDC ) is a bustle of activity, with members posting regularly to offer unwanted goods. The only hard and fast rule is that all items must be offered for free.'

5. இதைப் படிக்க வேண்டும் - சென்ற வருடம் பொருளாதார நோபல் பரிசு பெற்ற தாமஸ் ஷெல்லிங் எழுதி வெளியாகியுள்ள புதிய புத்தகத்தின் அறிமுகம் மிக சுவாரசியமாக இருக்கிறது:

"Long before Freakonomics or Tipping Points, there was Thomas C. Schelling, whose contributions to the understanding of economics, game theory and strategic human behavior were belatedly recognized with last year's award of the Nobel prize in economics. At a time when ideology and fuzzy thinking dominate the world of policy making, reading through 50 years of Schelling speeches and essays in Strategies of Commitment (Harvard), a collection that spans his years at Harvard and the University of Maryland, is a sheer delight. His style is so spare, straightforward and elegant, only hinting at the complexity of the logic behind it. Schelling's subjects range from nuclear deterrence and global warming to segregation, euthanasia, substance abuse and wars that cannot be won. His conclusions are invariably wise."

6. சோப்ரானோஸ் புதிய சீஸன்!! - எனது உள்ளங்கவர் கள்வன் டோனி சோப்ரானோ இன்று HBO-வில் மீண்டும் அவதரிக்கிறார் - ஆறாவது சீசன் இன்று துவங்குகிறது. நியூ ஜெர்சியில் வாழும் ஒரு மாஃபியாக் கும்பலைப் பற்றிய இந்தத் தொடர் தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு மைல்கல் தொடர் என்று சொன்னால் சத்தியமாய் மிகையில்லை. ஆரம்பத்தில் இதை நான் அவ்வளவாகப் பார்க்கவில்லை. ஆனால், பலர் சொல்லக் கேட்டு, இரு வருடங்களுக்கு முன்பு மனைவி-மகள் இந்தியாவில் இருந்த சமயம், ஒரு இரு வார அவகாசத்தில், netflix உபயத்தில், ஐம்பத்தி இரண்டு மணிநேரம் ஊன் - உறக்கம் மறந்து பார்த்து முடித்தேன். முடித்ததும், ஏன் இவ்வளவு அவசரப்பட்டு முடித்தேன் என்று நொந்து கொண்டேன். இத்தொடரின் அதி தீவிர ஈர்ப்பு சக்தி பார்த்தால் தான் புரியும் என்றாலும், இதன் ஆறாவது சீசன் பற்றி போஸ்ட் எப்படி சிலாகிக்கிறது பாருங்கள்:

"Tony's journey, which will occupy 12 weekly episodes this year and an additional eight starting in January, already has been one of the most rewarding and enthralling in the history of the medium. But wait, it gets better. Or, in terms of putting a viewer through the proverbial emotional wringer, it gets worse. It might even call for some newly minted accolades, because it truly is a television landmark that leaves lots of other landmarks in the dust."


Tuesday, March 07, 2006

அஞ்சு ப்ளேடும் அமேசான் டீயும்

இரண்டுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சென்ற வாரம் நான் முதல் முதலாக உபயோகித்த இரு பொருட்களைப் பற்றிய பதிவு இது.

1. ஜில்லெட் ஃப்யூஷன் -

முதலில் கத்தி இருந்தது. முதலில் தாடி இருந்தது. தாடி போச்சு கத்தி வந்தது டும்டும்டும்டும், கத்தி போச்சு ப்ளேடு வந்தது டும்டும்டும்டும். பிறகு ஒரு ப்ளேடு இரண்டாகியது; பின் இரண்டு ப்ளேடுகள் மூன்றாகி, மூன்று நான்காகி, இப்போது - ஆச்சரியம்! - நான்கு ஐந்தாகியிருக்கிறது. ஜில்லெட் ஃப்யூஷன் என்று நாமகரணம் பெற்ற இந்த உபகரணத்தில் ஒரு குச்சியின் உச்சியில் கஷ்டப்பட்டு ஐந்து மெல்லிய ப்ளேடுகளைத் திணித்து அதுவும் போதாதென்று அவற்றின் பின்னே இலவச இணைப்பாக இன்னொரு ப்ளேடையும் (trimmer!) வைத்திருக்கிறார்கள். சென்ற வாரம் காஸ்கோ சென்று இருபது டாலர் தோராயத்திற்கு ஐந்து ப்ளேடு குச்சிகள் வாங்கி வந்தேன். ஒரு குச்சி = ஐந்து ப்ளேடு, ஐந்து குச்சி = இருபத்தைந்து ப்ளேடுகள்!

மறு நாள் காலை சனிக்கிழமை என்றும் பார்க்காமல், மனைவியின் சந்தேகம் கலந்த ஆச்சரியத்தையும் சட்டை செய்யாமல், சவரம் பண்ணத் துவங்கினேன். மதமதவென்று ஜெல்லை அப்பிக் கொண்டு, ப்ளேடை உட்கார வைத்து ஒரு இழு இழுத்தேன் - இல்லை, இழுக்க முயன்றேன். ஆனால், ஐந்து ப்ளேடுகளில் ஒன்று - எது என்று சரியாகத் தெரியவில்லை - வசமாக ஒரு தாடி முடிக்கும் தோலுக்கும் இடையே மாட்டிக் கொண்டு தோட்டத்தில் களை பிடுங்குவது போல் 'உனக்காச்சு, எனக்காச்சு, விட்டேனா பார்' என்று வெளியே வர மறுத்தது. சாதாரண ப்ளேடாய் இருந்தால் ரத்த வெட்டோடு முடியும், இதில் தோலே வழண்டு விடும் போலிருக்கிறதே என்று மெல்ல ரிவர்ஸ் கியர் போட்டு ப்ளேடை மீட்டெடுத்தேன். அதற்குப் பிறகு பாபா ரஜினி போல் 'பட்டும் படாமலே தொட்டும் தொடாமலே' சவரம் செய்து முடித்தேன். எனக்குத் தெரிந்த வரை ஜில்லெட் இந்த அதி நவீன ப்ளேட் கொத்தின் மூலம் ஒரு புதிய சவர முறையை அறிமுகம் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் - 'ஜெண்டில்மேன், மற்ற ப்ளேடுகளெல்லாம் முடியை மட்டுமே பிடுங்கும், நாங்கள் முடி வளரக் காரணமாயிருக்கும் தோலையே உருவி விடுவோம்' என்று சொல்லி விளம்பரப்படுத்தலாம்.

எனக்குத் தெரிந்து இந்த ப்ளேடில் ஒரு சௌகரியம் தான் இருக்கிறது. புதுப்பேட்டை ரவுடிகள் ப்ளேடை உடைத்து வாயில் போட்டுக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த ப்ளேடை வாங்கினால், அவர்களுக்கு ஒரு வேலை மிச்சம் - ஏற்கனவே அழகாக நறுக்கி வைத்திருக்கிறார்கள்; ஹார்லிக்ஸ் சிறுவன் சொல்வது போல், 'அப்படியே சாப்பிடலாம்'!

ப்ளேடு தொழில்நுட்பம் இதற்குப் பிறகு எங்கே போகும் என்று யூகிப்பது கடினமில்லை - வேறு என்ன, ஆறு ப்ளேடுதான். ஆனால் எங்கே முடியும் இது? Nano blade, anyone? (மனைவியின் குரல்: "wax-ஐ ஊத்தி ஒரு இழு இழுத்தாத் தெரியும்..." Ouch!)

2. 'சே' குடித்த தேநீர்

அகஸ்மாத்தாய் USA Today'இல் படித்த கட்டுரை ஒன்றில் 'Motorcycle diaries' படத்தில் சே குவேரா குடிப்பதாக வரும் தென்னமெரிக்கத் தேநீர் பானம் பற்றி எழுதப்பட்டிருந்தது. அப்படத்தினால் வட அமெரிக்காவில் யெர்பா மாட்டே (Yerba Mate) என்ற அத்தேநீர் பிரபலமாகி, அதைத் தயாரிக்கும் நிறுவனம் (Guayaki) பெரிதாக வளர்ந்து வருவதில் இருக்கும் முரண்நகை குறித்து பொறுமை உள்ளவர்கள் யோசிக்கலாம். நான் இதைப் போன வாரம் Wegmans சென்று வாங்கி வந்தேன் (கடைச் சிப்பந்தி - "You are like the third person that asked me about this today").

எனக்கு எப்பொழுதுமே காப்பி குடிக்கும் வழக்கம் இருந்ததில்லை ("dude, are you sure you're from Madras?"). தேநீர் குடிக்க ஆரம்பித்ததும் சில வருடங்களுக்கு முன்புதான். ஆனால், குடிக்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே, தேநீரின் சுவையை விட, அதைக் குடித்ததும் வரும் உற்சாகச்சுரப்பிற்கு உடலும் மூளையும் பழக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு, புது வகையான தேநீர், புதிய சக்தி பானங்கள் என்றால், சும்மா ஒரு கை பார்க்கலாமே என்று தோன்றத் துவங்கியது. சமீபத்தில் ஸ்லேட் பத்திரிக்கையின் ஒரு கட்டுரையில் பிரபலமாய் இருக்கும் விதவித வினோத சக்தி பானங்களில் "Rockstar energy cola" என்ற பானத்தின் மகத்துவத்தை ரொம்பவும் சிலாகித்திருந்தார்கள். சரியென்று ஒரு நாள் மாலை ஒரு புட்டி வாங்கி 16 அவுன்சை கடகடவென்று விழுங்கி வைத்தேன். அவ்வளவு தான், அடுத்த இரண்டு மணிநேரம் தெறித்து விழுந்த ஸ்ப்ரிங் மாதிரி குதித்துக் கொண்டிருந்தேன். நட, ஓடு, நிற்காதே, உட்காராதே!!, பேசு, பேசு, வேகமாய்ப் பேசு, நடந்து கொண்டே பேசு - உடம்பின் ஒவ்வொரு பாகமும் தனியாய் அஜெண்டா போட்டுக் கொண்டு சுயேச்சையாய் என்ன என்னவோ செய்து கொண்டிருந்தன - கட கடவென்று. ஆனால், மூன்றாவது மணிநேரம் ஒரு தலைவலி வந்தது பாருங்கள்...unbelievable...அப்படியே தலை வீங்கி வெடித்து விடும் போல...anyways, that was the end of that.

ஆதலால், இந்த புதிய பானத்தை கொஞ்சம் சந்தேகோபாஸ்தமாகத் தான் அணுகினேன். சாதாரணமாக தேநீர் போடுவது போல் (பாலில்லாமல், கொதி நீர், இரண்டு ஸ்பூன் தேன்) போட்டுப் பருகினேன். வாசத்தில் கொஞ்சம் பச்சைத் தேநீர் சாயல் - ஒரு வித மண்ணும் மரமும் கலந்த வாசம் - ஆனால் பச்சைத் தேநீர் போல கடுமையாக இல்லை, கொஞ்சம் மிதமாக, பழக்கமான தேநீரின் வாசத்தை முழுதும் மறைக்காத விதத்தில். குடித்து முடித்ததும் உடல் முழுவதும் துடைத்து விட்டார்ப் போல ஒரு அப்பழுக்கில்லாத உற்சாகம் பரவியது. 'மதி தன்னை மிகத் தெளிவு செய்தது' போல் இருந்தது. இதைத் தினம் நாலு வேளை குடிப்பவர்கள் புரட்சி பண்ணாவிட்டால் தான் ஆச்சரியம் என்று தோன்றியது.

இத்தேநீரை, அமேசான் காடுகளின் ஒரு ஓரத்தில் சுற்றுச் சூழல் கெடாத வண்ணம் தயாரிப்பதாக குவாயாகி நிறுவனம் சொல்கிறது. இத்தேநீரைப் பல கஃபீன் அளவுகளில் பருக முடியும் என்பதால், உடல் நலத்துக்குத் தீங்கான காப்பிக்கு மாற்றாக அருந்தப்படக்கூடிய பானம் என்றும், இத்தேநீரில் இருக்கும் Anti-oxidant மற்றும் விட்டமின் சத்துகள் ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது என்றும் சொல்கிறது. தென்னமெரிக்காவில் இப்பானம் பருகப்படுவது எப்படி, இதைச் சார்ந்த சமூகப் பழக்கங்கள் என்னென்ன என்பன பற்றியும் செய்திகள் உள்ளன. பக்கத்தில் உள்ள படத்தைப் போல ஒரு குடுவையில் குடிப்பதுதான் சம்பிரதாயமாம்.

ஆகையால், இந்த இரண்டு பொருட்களில் ஒன்றுக்கு , மற்றொன்றிற்கு .


Sunday, March 05, 2006

சண்டே போஸ்ட் - 4

இன்றைய வாஷிங்டன் போஸ்டிலிருந்து சில சுவையான கட்டுரைகள்:

1. ஜனநாயகத்தை முன்வைத்து: தலையங்கம் - ஈராக்கில் ஜனநாயக அரசியலமைப்பை நிறுவுவதில் உள்ள சிக்கல்கள், மற்றும் பாலஸ்தீனியத்தில் ஹமாஸ் பெற்ற வெற்றி ஆகியவை, ஜனநாயகத்தின் கொடிதாங்கியான அமெரிக்காவிலேயே அது குறித்த கேள்விகளை எழுப்பி இருக்கிறது. எந்த சமுதாயத்தில் எந்த சூழ்நிலையில், எத்தகைய காலகட்டத்தில் ஜனநாயகம் தழைக்கும் என்று புதிய விதிகளும் கோட்பாடுகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. வாஷிங்டன் போஸ்ட் இன்றைய நீளமான தலையங்கத்தில் இக்கேள்விகளை ஆராய்ந்து, அதில் உள்ள நியாயங்களை அங்கீகரித்து, பதில் கேள்விகளை முன் வைக்கிறது. அதன் கருத்தின் சாராம்சம், சர்ச்சிலை நினைவுபடுத்துகிறது - “It has been said that democracy is the worst form of government except all the others that have been tried.”

2. பாட் டில்மனின் மரணத்தில் கிரிமினல் குற்றமா? - பாட் டில்மன் என்பவர் அமெரிக்காவில் பல மில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த விளையாட்டு வீரர். 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிற்காகப் போராட வேண்டும் என்ற தேச உணர்வுடன், தனது விளையாட்டுத் தொழிலை தியாகம் செய்து விட்டு, அமெரிக்கப் படையில் சேர்ந்து ஆஃப்கானிஸ்தான் சென்றவர். இரு வருடங்களுக்கு முன்பு அவர் போர்க்களத்தில் இறந்து விட்டதாகச் செய்தி வந்தது. ஆரம்பத்தில், இது வீர மரணம் - அதாவது, எதிரியோடு போரிட்டு, அப்போராட்டத்தில் எதிரியின் கையால் மரணம் - என்று சொல்லப்பட்டது. அச்சமயத்தில் இது அமெரிக்காவில் ஒரு பெரும் தேசாபிமான உணர்வு ஏற்படுத்தியது. சில வாரங்களுக்குப் பிறகு, 'இலலை இல்லை, எதிரி கையால் சாகவில்லை, சக அமெரிக்க வீரர் ஒருவர் சுட்டதால் ஏற்பட்ட விபத்து' என்று சொல்லப்பட்டது. இப்பொழுது அப்படி அசந்தர்ப்பமாய் சுட்ட வீரர்கள் சரியான பாதுகாப்பு முறைகளைக் கையாளவில்லை, அதனால் இதில் கிரிமினல் குற்றம் (negligent homicide) இருக்கலாம் என்று சொல்லி, மீண்டும் இதை ஆராய இருக்கிறார்கள்.

"A defense official said that it will probably focus on potential charges of negligent homicide, which means investigators will try to determine whether soldiers fired recklessly without intending to kill their fellow soldier....the first Army investigator who looked into the shooting discovered within days of the incident that Tillman had been killed by fellow Rangers, in what he concluded was an act of "gross negligence," according to documents obtained by The Washington Post. Soldiers admitted emptying their high-powered weapons at an Afghan Militia Force soldier working with the Rangers and then on Tillman's position without knowing what exactly was in their sights. The Afghan soldier was also killed, while a U.S. soldier hiding near Tillman, behind a rock, survived.

இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. சக அமெரிக்க வீரர் மீதே இப்படி கவனமின்றி, தாறுமாறாக சுட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கப் படை ஆஃப்கானியர்கள் (ஈராக்கியர்கள்) மீது எத்தகைய "கவனத்தோடு" செயல்படுகிறார்கள் என்றும் தெரியவில்லை.

3. சில வார்த்தை சுயசரிதை - வாஷிங்டன் போஸ்டில் வாராவாரம் வரும் ஒரு தொடர் - "Life in short - Autobiography as haiku" என்ற பகுதி. நூறு வார்த்தைகளுக்கு மிகாமல் தமது வாழ்க்கையிலிருந்து ஒரு விஷயத்தைப் பற்றி எழுத வேண்டும். ஒவ்வொரு வாரமும் இரண்டு கட்டுரைகளைப் பிரசுரிப்பார்கள் (சில வருடங்களுக்கு முன்னால் நான் எழுதியதும் இதில் வெளிவந்தது). இன்றைய கட்டுரைகள் இரண்டும் நன்றாக இருக்கின்றன - குறிப்பாக இரண்டாவது.

4.ஏன் வலைப்பதிகிறோம் - வலைப்பதிவாளர்களிடம் சென்ற வாரம் "ஏன் வலைப்பதிகிறீர்கள்" என்று கேட்ட கேள்விக்கு வந்த பதில்களைத் தொகுத்தளிக்கிறார். கட்டுரையிலிருந்து, ஒரு பதில்:

"I blog for the same reason lots of 20-somethings blog -- if I didn't blog, I wouldn't have any friends. Blogs may be the most complex pen-pal system ever created. . . . As sad or self-indulgent as it may seem to an older generation (of mostly Luddites), the Web log is just one facet of a new kind of community and a changing world. My Web log is the family newsletter, the virtual refrigerator door, the rotary club meeting, the office water cooler, the love letter and the town newspaper."

5.ஆஸ்கர் இரவு: இன்று ஆஸ்கர் இரவு. அரங்கத்துக்குள் நடக்கும் கூத்துக்களுக்கு இணையாக அரங்கத்துக்கு வெளியேவும் நடக்கின்றன. நட்சத்திரங்கள் வந்திறங்கி, சிவப்புக் கம்பளத்தில் நடந்து உள்ளே நுழைந்து முடிக்கும் வரை நடக்கும் படாடோபங்களை படமாக வரைந்து பாகங்களைக் குறித்திருக்கிறார்கள்.