<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Monday, June 27, 2005

குருமூர்த்தியின் அமெரிக்க விஜயம்

பொருளாதார வல்லுநரும், ஸ்வதேஷி ஜாக்ரன் மஞ்ச் தலைவருமான எஸ். குருமூர்த்தி சமீபத்தில் அமெரிக்கா விஜயம் செய்திருக்கிறார். அது குறித்து, ஜூன் 26-ம் தேதி துக்ளக்கில் எழுதியுள்ள கட்டுரையில், இங்கு (அமெரிக்காவில்) நிகழ்த்திய உரையில் குறிப்பிட்ட மூன்று விஷயங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.


  1. 9/11-க்குப் பிறகு, "எதற்கும் கவலைப்படும் விசனத்தில் ஆழ்ந்திருக்கும் இறுக்கமான அமெரிக்காவாக மாறி விட்டிருப்பதைப்" பார்த்து, இந்நாட்டு மக்களிடம் "எப்படி பயங்கரவாதத்தை சாதாரணமான மக்கள், பாரத நாட்டில் எதிர் கொள்கிறார்கள் என்பதை" விளக்கியிருக்கிறார். இந்திய நாட்டு மக்களைப் போல் சாதாரண அமெரிக்கர்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்வது என்பது முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

  2. கடந்த 10-15 ஆண்டுகளில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் பொருள் மதிப்பும், சமூக அந்தஸ்தும் மிக அதிகமாக முன்னேறி இருக்கிறது. ஆனால், "தங்களுடைய புதிய அந்தஸ்தால், எந்த அளவுக்கு அவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுய கௌரவமும் ஏற்பட்டிருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு மாறுதல் காண முடியவில்லை".

  3. "கடந்த 5-6 ஆண்டுகளில் உலக அளவில் பாரத நாட்டின் அந்தஸ்தும் பெருமளவில் உயர்ந்திருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் - போக்ரானில் நாம் அணுகுண்டு வெடித்து, உலக சக்தியாக நம்மை அறிவித்து அச்சாரம் போட்டதுதான்".


முதல் கருத்து புரியவில்லை. இந்தியாவில் சாதாரண மக்கள் பயங்கரவாதத்தைச் சமாளிக்கிறார்களா? என்ன சொல்ல வருகிறார்? இரண்டாவது கருத்து பாதி உணமை - நான் பார்த்த வரை இந்தியாவை மட்டம் தட்டும் ஒவ்வொருவருக்கும், இன்னொருவர் முதுகைக்காட்டிக் கொண்டு இந்தியாவைப் பற்றி வெற்று ஜம்பம் பேசிக் கொண்டிருப்பார். It's a wash. மூன்றாவது கருத்து முழு அபத்தம்.

இங்கே தான் பக்கத்தில் பால்டிமோரில் பேசி இருந்திருக்கிறார். நல்லவேளை முன்னாடியே தெரியாமல் போயிற்று. தெரிந்திருந்தால், போய்த் தொலைத்திருப்பேன்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

2 Comments:

Blogger முகமூடி said...

எப்படிங்க சரியா மூக்குல வேத்துருக்கு உங்களுக்கு.... இப்பத்தான் இணையத்துல இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் அமெரிக்க வந்து என்ன பண்றாங்கன்னு ஏன் யாருமே பேசறதில்லைன்னு கேள்வி கேட்டுருக்காங்க இங்க

June 27, 2005 10:23 PM  
Blogger -L-L-D-a-s-u said...

இங்கே பினாத்துவது பத்தாது என்று அமெரிக்காவிலும் பினாத்துகிறாரா குருமூர்த்தி.. கைதட்ட ஒரு கூட்டம் இருக்கும்வரை இவர்களுக்கு கவலையில்லை..

June 28, 2005 12:50 AM  

Post a Comment

<< Home