<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Thursday, June 23, 2005

புத்தக மீமீ

வலைப்பதிவுலகத்தில் புத்தக மீமீ ஏறத்தாழ ஓய்ந்து விட்டது. ஆட்டத்திற்கு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்; பிகேஎஸ்-இன் அழைப்பிற்கு நன்றி.

எனது புத்தக அலமாரியில் அதிகம் புத்தகங்கள் கிடையாது. காரணம், படித்த புத்தகங்களை யாருக்காவது தானம் கொடுத்து விடுவேன். அதற்குக் காரணம், எந்தப் புத்தகத்தையும் இரண்டாம், மூன்றாம் முறையெல்லாம் படிக்கும் வழக்கமே எனக்குக் கிடையாது. எனக்குத் தெரிந்து பொன்னியின் செல்வனை ஒரே ஒரு முறை படித்தவன் நான் ஒருவன் தான்.

இனி, தமிழில் பத்து, ஆங்கிலத்தில் பத்து.

தமிழ்:

  • பொன்னியின் செல்வன் - இரண்டாம் பகுதி படிக்கும் போதே, 'ஐயோ இன்னும் மூன்று பகுதிகளில் முடிந்து விடுமே' என்று ஏங்க வைத்த புத்தகம்
  • மோக முள் - இசையைப் பற்றிய வருணனைகளுக்கு மட்டுமே படிக்க வேண்டிய புத்ததம்
  • ஸ்ரீரங்கத்து தேவதைகள் - கேள்வியே இல்லை - சுஜாதாவின் ஆகச்சிறந்த சிறுகதைத் தொகுப்பு.
  • வசந்த் வசந்த் - நக்கலான நடை; அட்டகாசமான கதை; Top form-இல் கணேஷ்-வசந்த்
  • ஒரு புளியமரத்தின் கதை - சிக்கலான கதையை இத்தனை சுவையாகச் சொல்ல முடியுமா என்று வியக்க வைத்த நாவல்
  • புலிநகக் கொன்றை - பக்கத்துக்குப் பக்கம் வியக்க வைத்த கதை. சுஜாதா இதைப் பற்றி கருத்து சொல்லி இருக்கிறாரா என்று தெரிந்தால் சொல்லவும்.
  • பிரம்மோபதேசம் - ஒரு மிக நுட்பமான கருத்தை மிக எளிமையாகச் சொல்வதில் ஜெயகாந்தன் சமர்த்தர் என்று நிரூபிக்கும் கதை.
  • காமராஜை சந்தித்தேன் - சோவை ஒரு கோமாளியாக அல்லாது ஒரு உணர்ச்சி பூர்வமான மனிதராகச் சித்தரிக்கும் புத்தகம்
  • ஆத்மாநாம் கவிதைகள் - இது பற்றித் தனியாக எழுத வேண்டும் - ஆத்மானாம் சென்ற நூற்றாண்டின் ஒரு பெரும் கவிஞர்.
  • புதுமைப்பித்தன் சிறுகதைகள் - ஒரு எழுத்தாளனிடம் இத்தனை சாகசமா?


ஆங்கிலம்:

  • Deptford Trilogy by Robertson Davies - எளிமையான நடையில் ஒரே கதையை மூன்று பார்வையிலிருந்து சொல்லும் வித்தியாசமான நாவல்.
  • The Devil's disciple by GB Shaw - ஷாவின் ஆகச்சிறந்த படைப்பு
  • Atlas Shrugged by Ayn Rand - சின்ன வயதில் படித்த போது ஏற்பட்ட தாக்கம் இன்னமும் தணியவில்லை.
  • Small is Beautiful by EF Schumacher - காந்தீய பொருளாதாரத்தின் உண்மையான அர்த்தமும், பயன்பாடும்.
  • Games people play by Eric Berne - உளவியலில் ஒரு மைல்கல் புத்தகம்
  • Mahabharatha by Rajaji - எனக்குத் தெரிந்து இது தான் மகாபாரதம்
  • Three men in a boat by Jerome K Jerome - பைத்தியக்காரன் போல் சிரித்துக் கொண்டு படித்த புத்தகம்
  • Fear is the key by Alistair Maclean - படித்த உடனேயே திருப்பிப் படிக்க வைத்த ஒரே புத்தகம்
  • Bridge across forever by Richard Bach - sentimental favorite :-)
  • Swami and friends by R K Narayan - எப்போது படித்தாலும் எவரையும் பாலகராக்கும் புத்தகம்.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

3 Comments:

Blogger NambikkaiRAMA said...

//படித்த புத்தகங்களை யாருக்காவது தானம் கொடுத்து விடுவேன்//
அன்பீர்! புத்தகங்களை யாருக்காவது படிக்கக் கொடுத்தாலே அது தானம்தான்(ஹி..ஹி..திரும்பி வரவாப் போகிறது)

June 24, 2005 12:25 AM  
Blogger பிச்சைப்பாத்திரம் said...

அப்படியா? பரவாயில்லையே... உங்கள் வீட்டு முகவரி கொடுங்களேன். தானம் கேட்க அப்பப்ப வருகிறேன். :-))) (என்னடா இது இப்படி கேக்கறானேன்னு பாக்காதீங்க. என்னோட வலைப்பதிவு பெயரையும் பாருங்க)

June 24, 2005 1:34 AM  
Blogger PKS said...

Srikanth,

Welcome to the Tamil Blog World! And wish you develop some thickskin sooner, to survive in this peculiar world!!! :-)) But, please keep writing. It will help people like me to know you better.

Thanks and regards, PK Sivakumar

June 26, 2005 10:04 PM  

Post a Comment

<< Home