<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d13780929\x26blogName\x3d%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://kurangu.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://kurangu.blogspot.com/\x26vt\x3d3380274728347735214', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

Wednesday, June 22, 2005

அன்னியன்

அன்னியன் படம் பற்றி அருண் எழுதியது தான் கிட்டத்தட்ட என் கருத்தும்.

1. இந்தப் படம் சமூக அவலங்கள்/ஒழுக்கக் கேடுகள், அது பற்றி எழும் தார்மீகக் கோபங்கள் போன்ற தளங்களில் ரொம்ப சுமாராகத்தான் இயங்குகிறது. ரயிலில் சாப்பாடு சரியில்லை என்பதற்காகக் கொலை செய்ய வேண்டுமா, வண்டியை நிறுத்தாமல் போனதற்கு எருமை வதமா என்றெல்லாம் முதல் பாதியில் கேள்விகள் வந்தாலும், மனச்சிதைவுக்கு உள்ளானவன் என்ற விளக்கம் வரும் போது, அவையெல்லாம் ஒரு கோபத்தின் அதீத வெளிப்பாடுகள் என்று சமாதானம் செய்து கொள்ள முடிகிறது. ஆனால், நேரு ஸ்டேடியம் போய் அன்னியன் லெக்சர் விடும் போது, அந்த சமாதானம் அடிபட்டுப் போகிறது. மக்கள் அன்னியனின் நடவடிக்கைகளை ஆரவாரத்தோடு ஆதரிப்பதாய் காட்டும் போதும், அவனே தனது செய்கைகளை தர்க்க ரீதியாக நியாயப்படுத்துவதாகக் காட்டும் போதும், இயக்குனரே அந்தப் பாத்திரத்தின் செயல்கள் சரிதான் என்று சொல்வதாக அமைகிறது. இதனால் படத்தின் தார்மீக அஸ்திவாரம் ஆட்டம் கண்டு விடுகிறது.

2. சதா சாதா.

3. சண்டைக்காட்சிகள் சுமாராகத் தான் இருந்தன. தயவு செய்து இன்னொரு முறை கதாபாத்திரத்தை அந்தரத்தில் தொங்க விட்டு காமெராவைச் சுற்றாதீர்கள். வேண்டுமானால் காட்சியை நிறுத்தி விட்டு ஒரு வார்த்தை சொல்லுங்கள், தியேட்டரின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிக்கு ஓடிப்போய் மற்றொரு ஆங்கிளிலிருந்து நானே பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கும் செலவு மிச்சம்.

4. 26 கோடி செலவு செய்ததாகச் சொன்னார்கள். திரையில் திரவியம் தெரியவில்லை.

ஆனால் இதையெல்லாம் மீறி படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம் (பெரிய திரையில்). விக்ரம் நடிப்பு அசத்தல் (கமல் படத்தைப் பார்த்தால் வெப்பப் பெருமூச்சு விடுவார்), விவேக் நகைச்சுவை பிரமாதம், மூன்று பாடல்கள் பல முறை கேட்கலாம். இதையெல்லாம் விட படம் என்னை கடைசி வரை ஆர்வம் குன்றாமல் உட்கார வைத்திருந்தது.

மனம் ஒரு குரங்கு - முதல் பக்கம்

2 Comments:

Blogger Sensoft2000 said...

Very nice article... ahhahaha
me too think the same. But i think the songs are costly than the film. is it right?. I like the kannum kannum nokia song visual.

June 24, 2005 3:09 AM  
Blogger குமரேஸ் said...

"தியேட்டரின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிக்கு ஓடிப்போய் மற்றொரு ஆங்கிளிலிருந்து நானே பார்த்துக் கொள்கிறேன். உங்களுக்கும் செலவு மிச்சம்"

இது மட்டும்தானா, வேறு ஏதும் உண்டா?

June 24, 2005 12:46 PM  

Post a Comment

<< Home